நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே. நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது