திருமண நிகழ்வில் ஏற்பட்ட தகராறில், மணமகன் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கொம்பனித்தெரு, டாசன் வீதியில் நடந்த திருமண நிகழ்விலேயே இந்த விபரீதம் நிகழ்ந்தது.
மணமகளின் முன்னாள் கணவனனே இந்த கொலையில் ஈடுபட்டார்.
உயிரிழந்தவர் முச்சக்கர வண்டி சாரதியான மொஹமட் ஷயாபிதீன் (51) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (16) காலையில் பதிவுத் திருமணம் செய்த இந்த ஜோடி, அன்று இரவே வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதன்போதே, இந்த விபரீதம் நிகழ்ந்தது.
மணமகள் மொரட்டுவை சொய்சாபுர பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண் எனவும் அவருக்கு முதல் திருமணத்தில் மூத்த மகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மணமகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து சந்தேகநபர் தப்பியோடிய நிலையில் நேற்று காலை கொம்பனித்தெரு பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.