தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசுக்கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் இன்று காவிரி ஆற்றில் இளம்பெண் சடலம் ஒன்று மிதந்து சென்றுள்ளது. இதனை கண்ட மீனவர்கள், இதுகுறித்து ஓகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் தர்மபுரி நெல்லி நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரனின் மகள் பிரியங்கா (22) என தெரிய வந்தது. இவர் தருமபுரி அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மாயமானதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து, போலீசார் பிரியங்காவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பிரியங்காவின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்கா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.