இலங்கையில் தங்கத்தின் விலை 200,000 ரூபாவை கடந்தது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 200,000 கடந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றன.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், டொலரின் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதாக தங்காபரண வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.