இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் பெற்றோல் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி சகலவிதமான பெற்றோல் வகைகளின் விலையும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இ-ன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 303 ரூபாயாகவும், 95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 332 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.